10 people arrested for selling food in public places
துபாயில் உரிமம் இல்லாமல் உணவு விற்பனை – 10 பேர் கைது
10 பேர் கைது (10 people arrested)
துபாய் காவல்துறை, ரமலான் மாத பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொது இடங்களில் உரிமம் இல்லாமல் உணவு விற்பனை செய்த 10 நபர்களை கைது செய்துள்ளது. இவர்கள் முறையான சுகாதார நிலையைப் பின்பற்றாமல் செயல்பட்டு, பொதுமக்களுக்கு ஆரோக்கிய ஆபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த வியாபாரிகளின் நடவடிக்கைகள் நகரத்தின் ஒழுங்குமுறைகளுக்கு புறம்பாகவும், கட்டுப்பாடற்ற தற்காலிக சந்தைகளை உருவாக்கி நகரத்தின் அழகை பாதிக்கக்கூடியதாகவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துபாய் காவல்துறை குற்றவியல் புலனாய்வு பொதுத் துறையின் துணை இயக்குநர் கர்னல் அஹ்மத் அல் அதீதி, “அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள் தொழிலாளர் தங்குமிடப் பகுதிகளுக்கு அருகில் செயல்படுகிறார்கள். அவர்கள் தரமற்ற சூழலில் உணவுகளை விற்பனை செய்வதால் பொதுமக்கள் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகலாம்” என்று எச்சரித்தார்.
மேலும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க துபாய் காவல்துறை 24 மணி நேரமும் ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறது. பொது மக்கள் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட வணிகங்களை மட்டுமே நம்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📢 இது போன்ற அமீரக செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்