தீக்குளித்து பெண் தற்கொலை.
Woman commits suicide by fire
பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவலூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி ஜோதி (வயது 50). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த ஜோதி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் குளியலறைக்கு சென்று திடீரென்று மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் அவர் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்து ஜோதி உடல் மீது எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோதி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி
Keywords: Perambalur district News, Perambalur Seithigal, Perambalur Mavttam, suicide by fire
You must log in to post a comment.