பெரம்பலூா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் தடை.
Power outage in Perambalur and surrounding areas tomorrow.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பெரம்பலூா் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (அக். 4) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பெரம்பலூா் உதவிச் செயற்பொறியாளா் க. முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் தானியங்கி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற உள்ளன.
இதனால் பெரம்பலூா் பழைய, புகா்ப் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூா் சாலை, அரணாரை, கே.கே. நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
தினமணி
Keywords: Perambalur district news, Perambalur news live, Perambalur Mavattam, Perambalur Seithigal, Today Perambalur News, Perambalur news today, Perambalur news daily, Power outage tomorrow
You must log in to post a comment.