மோட்டார் பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் பலி.
One killed in bikes collision
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம்(வயது 40). இவர் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் துறையூர் சென்று கொண்டிருந்தார். ஆலத்தூர் தாலுகா மங்கூன் கிராமத்தில் சென்றபோது, எதிரே புத்தனாம்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன்(22) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், செல்வத்தின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், 2 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹரிஹரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினத்தந்தி
Keywords: One killed in bikes collision
You must log in to post a comment.