பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார்

பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே காயங்களுடன் ஆண் பிணம்.

462

பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே காயங்களுடன் ஆண் பிணம். Male corpse with wounds.

உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர்  அரசு மருத்துவமனை அருகே பிணமாக கிடந்தார்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே நேற்று மதியம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பெரம்பலூர் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Keywords: Male corpse,




%d bloggers like this: