பெரம்பலூரில் கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம். Lawyers protest in Perambalur
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்கும் முடிவினை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற வலியுறுத்தி வக்கீல்கள் சங்கத்தினர், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள், குன்னத்தில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்கும் முடிவினை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே அவர்கள் கடந்த 16-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தினர் கடந்த 9-ந்தேதி தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை நீதிமன்றம் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Keywords: Lawyers protest, Perambalur Lawyers,
You must log in to post a comment.