காட்டுயானம் அரிசியின் பயன்கள்..! Kattuyanam Rice Benefits
எத்தனையோ அரிசி வகைகள் இந்த உலகில் இருக்கின்றது. இனிவரும் காலங்களிலும் பல வகையான புதுப் புது அரிசிவகைகளை நமது விஞ்ஞானிகள் உண்டாக்கலாம். மக்கள் தொகையின் தேவைக்கேற்ப உற்பத்தியும் அதிகமாக தேவைபடுகிறது. அதே போல பாரம்பரிய அரிசி ரகங்களில் சில நெல் ரகங்கள் மறைந்து போனாலும் பல நெல் ரகங்கள் இன்னும் உயிர்ப்புடனே இருக்கின்றது. அந்த பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று இந்த காட்டுயானம் (Kattuyanam Rice). இந்த நெல் வகையை பற்றியும், அதன் பயன்களைப்பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
பெயர்க் காரணம்:Kattuyanam Rice
7 மாதங்களில் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த காட்டுயானம் நெல்லானது 7 அடி முதல் 8 அடி வரை நன்கு செழித்து வளர்ந்து காணப்படும். அதாவது யானையை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து வளர்வதால் இப்பெயர் பெற்றது என்றும். இந்த அரிசியைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு யானை பலம் கிடைக்கும் என்பதாலும் இந்த பெயர் பெற்றது என்றும் கூறுகின்றனர்.
இதன் நிறம்:
இந்த அரிசியானது இப்போது கிடைக்கின்ற அரிசி போன்று பளபளப்பாக வென்மையான நிறத்தில் இருக்காது. சிவப்பு நிறத்தில் கொஞ்சம் தடிமனாக இருக்கும். பார்க்க தடிமனாக இருப்பது போல அதன் பயனும் தடிமனாகவே இருக்கும் என்று காமெடியாக சொல்லலாம்.
காட்டுயானம் அரிசி உண்பதால் உண்டாகும் பலன்கள்:
புற்றுநோயைப் போக்கும்: Kattuyanam Rice Benefits
காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதால் புற்று நோய் உண்டாகாமல் தடுக்கிறது. எப்படி? இதிலுள்ள சத்துகள் நம் உடலில் உருவாகக்கூடிய புற்று நோய் செல்களை அழித்து போராடுகிறது. இதனால் புற்றுநோய் உண்டாகாமல் நம்மை பாதுகாக்க உதவுகிறது.
மலச்சிக்கல் பிரச்சனை: Constipation problem
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்குக் காட்டுயானம் அரிசி உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.
நீரிழிவு நோய் குணமாகும்: Diabetics
இந்த அரிசியைச் சாப்பிட்டாலே நீரிழிவு நோய் நம்மை நெருங்கவே நெருங்காது. நீரிழிவு நோயாளிகள் இந்த காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை நோய் குணமாவதுடன் சர்க்கரை அளவு சமநிலையிலும் இருக்கும்.
இதய நோய் குணமாகும்: Heart problem
ஆண்டி ஆக்சிடன்ட் இந்த அரிசியில் அதிகளவு இருப்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும். இதய சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த காட்டுயானம் அரிசியை தங்களது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
செல்கள் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியம்:
இந்த அரிசியை நாம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நம் உடலிலுள்ள செல்கள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது உயிரணுக்களின் மரபணுப் பொருளான டிஎன்ஏ வை உருவாக்குகிறது. மற்றும் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு (மெகாலோபிளாஸ்டிக்) இரத்த சோகையை தடுக்கிறது.
இன்னும் பிற பயன்கள்:
- இந்த அரிசியானது நமது வயிற்றில் செரிமானம் ஆகி, சிறிது சிறிதாக ரத்தத்தில் குளுக்கோஸை (Glucose) சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது.
- நீடித்த எனர்ஜி கிடைக்கும். மேலும் விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
- மெதுவாகச் செரிமானம் ஆவதினால் பசியைத் தாமதப்படுத்துகிறது.
Keywords: Kattuyanam Rice Benefits