police-are-searching-for-the-culprits

சிறுநிலா கிராமத்தில் சாவிலும் இணை பிரியாத தம்பதி.

407

சிறுநிலா கிராமத்தில் சாவிலும் இணை பிரியாத தம்பதி.

Inseparable couple in death

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுநிலா கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 76). இவரது மனைவி ராமாயி (71). இவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 மகன்கள். இதில் 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். மற்ற 2 பேருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

மனைவியுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த ராமசாமி அவ்வப்போது அவருடன் சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராமசாமி கடந்த 25-ந் தேதி உயிரிழந்தார். இதனால் துக்கம் தாங்க முடியாத ராமாயி மிகவும் சோகத்துடன் காணப்பட்டார். மறுநாள் ராமசாமியின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு ராமாயியும் திடீரென உயிரிழந்தார்.

இதையடுத்து உறவினர்கள், 2 பேரின் உடல்களையும் ஒன்றாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

Our Facebook Pages

Keywords: Perambalur District News, Perambalur Mavattam, Today Perambalur News, Perambalur News Today, Latest Perambalur News, Inseparable couple, Inseparable couple in death




%d bloggers like this: