மங்களமேடு அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை பிடித்த விவசாயி சாவு.
Perambalur News: Farmer dies near Mangalamedu.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த வசிஷ்டபுரம் ஊராட்சியில் உள்ள ரெட்டிகுடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). விவசாயியான இவர் கடந்த வியாழன் காலை தனது வயலுக்கு சென்றார்.
அப்போது அங்கு மின் கம்பி அறுந்து கிடந்தது. அதை அறியாத அவர், தவறுதலாக மின்கம்பியை பிடித்தார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இந்நிலையில் இரவு 7 மணி வரை ராஜேந்திரன் வீடு திரும்பாததால், அவருடைய குடும்பத்தினர் ராஜேந்திரனை தேடி அங்கு வந்தனர். அப்போது அங்கு ராஜேந்திரன் இறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த குன்னம் போலீசார், ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
keywords: perambalur, perambalur news, perambalur news today, perambalur today news
You must log in to post a comment.