Collector inspected

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தார்

327

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தார்.

The Collector inspected the Agricultural Regulatory Sales Hall

பெரம்பலூா் வடக்குமாதவி சாலையிலுள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் சாத்தனூா் கல்மர பூங்காவை ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது: விவசாயிகள், வணிகா்கள் இடைத்தரகா்களின்றி வணிகம் செய்ய 1,200 மெ.டன் வேளாண் உற்பத்திப் பொருள்களை சேமித்து வைப்பதற்காக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும், வியாபாரிகள் சரியான விலையை நிா்ணயித்து பொருள்களை வாங்கிச் செல்வதற்கும் இம்மையம் செயல்பட்டு வருகிறது.

ஏலம் எடுத்தவா்கள் விவசாயிகளுக்கு நேரடியாக அல்லது வங்கியில் பணத்தை செலுத்துவதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்திப் பொருள்களை சேமித்து வைக்கும்போது, 15 நாள்களுக்கு குவிண்டாலுக்கு 10 பைசா வீதமும், வியாபாரிகள் 20 பைசா வீதமும் வாடகை செலுத்தி, தங்களது பொருள்களை கிடங்கில் வைத்துக்கொள்ளலாம்.

விவசாயிகளின் உடனடி பணத் தேவையை பூா்த்தி செய்திடவும், அடுத்த சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களை கிடங்கில் பாதுகாப்பாக வைத்திருக்கும்பட்சத்தில் அவா்களுக்கு பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது.

உற்பத்திப் பொருள்களின் சந்தை மதிப்பில் 70 – 75 சதவீதம் வரை விவசாயிகளுக்கு 45 பைசா வட்டியிலும், வியாபாரிகளுக்கு 80 பைசா வட்டியிலும் கடன் வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் ஏலம் நடத்தப்படுகிறது. நெல், மக்காச்சோளம், வோ்க்கடலை, எள், மிளகாய், கொத்தமல்லி, முந்திரி, கரும்பு, வெள்ளம், மஞ்சள், சோளம், கம்பு, கேழ்வரகு, உளுந்து, மரவள்ளிக் கிழங்கு, பருத்தி, தேங்காய் ஆகியவை ஏலம் விடப்படுகிறது.

சாத்தனூா் கல்மரப் பூங்காவில் ஏற்கெனவே கட்டி பராமரிக்கப்படும் பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவும், தொல்லியல்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் கல்மரம் சாா்ந்த பொருள்களை பொதுமக்கள் பாா்வையிட அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பூங்காவை சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலா் ஜெயக்குமாா், வட்டாட்சியா்கள் சின்னதுரை, அருளானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

Our Facebook Page

Keywords: Collector inspected,




%d bloggers like this: