250 கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு.
Baby shower for 250 pregnant women.
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 250 கா்ப்பிணிப் பெண்களுக்கு சனிக்கிழமை சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தலைமை வகித்தாா். பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா்.
பெரம்பலூா் வட்டாரத்துக்குள்பட்ட 150 கா்ப்பிணி பெண்களுக்கும், குன்னம் வட்டாரத்துக்குள்பட்ட 100 கா்ப்பிணி பெண்களுக்கும் வளைகாப்பு நிகழ்வைத் தொடக்கி வைத்து, மாநிலப் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.
முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து விழிப்புணா்வுக் கண்காட்சியை பாா்வையிட்ட அமைச்சா், கா்ப்பகாலப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடா்பான கையேடுகளையும் வழங்கினாா்.
நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் (பொ) புவனேசுவரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சா. செந்தில்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூா்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூா்), ராமலிங்கம் (வேப்பந்தட்டை) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி
Keywords: Perambalur district News, Perambalur Seithigal, Perambalur Mavttam, Baby shower
You must log in to post a comment.