உதடுகளால் முதல்-அமைச்சர் உருவப்படத்தை வரைந்த மாணவர்
முதல்-அமைச்சரின் உருவப்படத்தை கல்லூரி மாணவர் உதடுகளால் வரைந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் நரசிம்மன்(வயது 20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் கட்டிட வரைகலை படிப்பு படித்து வருகிறார். இவர் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை உதடுகளால் வரைய முடிவு செய்தார். அதன்படி நேற்று வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் கோவிலின் முன் மண்டபத்தில் சுமார் 20-க்கு 10 அடியுள்ள வெள்ளை நிற துணியை விரித்து, அதில் தனது உதடுகளில் தடவப்பட்ட சிவப்பு வண்ணத்தை (வாட்டர் கலர்) பதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவப்படத்தை வரைந்தார். அதனை வீடியோவில் பதிவு செய்து, புக்ஸ் ஆப் ரெக்கார்ட் என்ற நிறுவனத்திற்கு சாதனை தகவலை பதிவு செய்ய அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். அவர் படம் வரைந்ததை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
Keywords: முதல்-அமைச்சர்
You must log in to post a comment.