ரஞ்சன்குடி அருகே மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்.
மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள ரஞ்சன்குடியில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் ரஞ்சன்குடி பாலம் அருகே டிராக்டரில் மணல் ஏற்றி வந்த ரஞ்சன்குடியை சேர்ந்த மணி (வயது 28) என்பவரை மங்களமேடு போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, மணியை கைது செய்தனர்.
You must log in to post a comment.