பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 127 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
முதியவர் சாவு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 76 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 17 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 14 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 20 பேரும் என மொத்தம் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 6,505 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா காரைப்பாடி கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1,037 பேருக்கு பரிசோதனை
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 4,021 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,434 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 48 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,037 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தினத்தந்தி
You must log in to post a comment.