பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,702 ஆக உயர்ந்துள்ளது. இதில் 24 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது பெண்ணும், பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 65 வயதுடைய பெண்ணும், 47 வயதுடைய ஆண் ஒருவரும் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,462 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 213 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Keywords: கொரோனாவுக்கு பலி, கோவிட்-19, COVID-19, Corona
You must log in to post a comment.