வேப்பந்தட்டையில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்.
போலீசார் வாகன சோதனை செய்து, விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் மாவட்ட போலீஸ் அதிகாரி நிஷா பார்த்திபன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் இ-பதிவு இல்லாமல் வாகனங்களில் வந்தவர்களையும் பிடித்து அபராதம் விதித்தனர். முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
தினத்தந்தி
You must log in to post a comment.